- பிஎஸ்எம் ஜி.கே
- ஸ்டாலின்
- பி.ஆர்.சி.ஸ்ரீராம்
- சென்னை
- இறைவன் பிரபு
- எங்கள் முதல்வர் பெருமைப்படுகிறார்
- திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானம்
- கி.மு.
- பி.ஆர்.சி.ஸ்ரீராம் பாராட்டு
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை சமீபத்தில் நடிகர் பிரபு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலர் அங்கு வந்து புகைப்பட கண்காட்சியை பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் நேற்று புகைப்பட கண்காட்சியை கண்டு களித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நீண்ட நெடுநாளுக்கு பிறகு தமிழ்நாட்டில் முதல்வரை இப்படி பார்ப்பது பெருமையாக இருக்கிறது. முதல் தடவையாக முதல்வருடைய புகைப்படங்களை பார்த்து பெருமைப்படுகிற தருணம் இது. தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழகத்துக்கும் இது பெருமை. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கிறது. அதற்கு தலைவராய் ஸ்டாலின் இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் தான் நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பது பெருமை: பி.சி.ஸ்ரீராம் புகழாரம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.